உன் பசி, உன் தாகம், உன் உடை
என்று தான்
உடன் பிறந்த விலங்கினை, மரங்களை
அழித்தாய்!
பேராசை கொண்டு பொருள் தேடி, பொருள் தேடி,
பூமித்தாயின் பொன்மேனி துளைத்தாய்,
ஒரு குவளை குளிர்ந்த நீர் நீ பெற்றி ட
உனை குளிரவைக்கும் ஓசோன் வலையினை
கிழித்தாய்!
நீ செய்த பல சாதனைகள் வழி
இனியொரு பூமி கிடைக்குமா?
சுயநலத்தை புதைத்து பூமியை சுழலவிடு
மாக்களுக்காய் மட்டுமல்ல, மரங்களுக்காய் மட்டுமல்ல,
மிருகனே உன் மைந்தர்களுக்காயும்!
- அனுராதா சாயிநாதன்
- அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக